திங்கள், 8 மார்ச், 2010

காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும்...

காலையிலும்,மாலையிலும் ,படுக்கைக்கு செல்லும்போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்கர் (ரலி )கேட்டார்கள்.அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துவாவைக் கற்றுக்கொடுத்தார்கள் .---ஆதாரம் :அஹ்மத் 49 ,60 .77

அல்லாஹும்ம (F )பா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, ஆலிமல் ஃகை(B )பி வஷ்ஷஹாதத்தி , ரப்ப(B ) குல்லி ஷைஇன் வமலீ(க் )கஹூ , அஷ்ஹது அன் லாயிலாஹா இல்லா அன்(த்)த ,அவூது பி(B )க்க மின் ஷர்ரி நப்(F )ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி .

இதன்பொருள்:

இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே ! மறைவானதையும் , வெளிப்படையானதையும் அறிபவனே ! அனைத்துப் பொருட்களின் அதிபதியே ! அரசனே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை .எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ,ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக